துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் நாயகனாகும் பட டைட்டில் டீசர்! ரஜினிகாந்த் வெளியிட்டார்!

அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:23 pm IST

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சசி குமார் நாயகனாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந். இப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது.

இந்த நிலையில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் மூலம் அபிஷன் ஜீவிந் நாயகனாக அறிமுகமாகிறார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கும் இப்படத்தை எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், “வித் லவ்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தின் டைட்டில் டீசரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (நவ. 21) வெளியிட்டுள்ளார்.

Summary

Superstar Rajinikanth has released the title teaser of the film, which will mark the debut of ‘Tourist Family’ director Abhishan Jeevinth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.