ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

தோட்டா தரணி அமைத்த பிரம்மாண்ட செட் குறித்து...

News image
கலை இயக்குநர் தோட்டா தரணி
Updated On :26 நவம்பர் 2025, 12:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கலை இயக்குநர் தோட்டா தரணி தன் பெரிய செட் அமைப்பு குறித்து பேசியுள்ளார்.

இந்தியளவில் பிரபலமான கலை இயக்குநர் தோட்டா தரணி. ஓவியரான இவர் கலை இயக்குநராக பல சாதனைகளையும் ஆச்சரியப்படுத்தும் செட் அமைப்புகளையும் செய்தவர்.

முக்கியமாக, நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற தாராவி காட்சிகளெல்லாம் சென்னையில் அமைக்கப்பட்டவைதான். மேலும், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திர போராட்டக் காட்சிகள் உள்பட பலவற்றை தத்ரூபமாக செட் போட்டு அசத்தியவர் தோட்டா தரணி. சிவாஜியில் இடம்பெற்ற, ‘வாஜி.. வாஜி..’ பாடலை மறக்க முடியுமா?

காதலர் தினம், தசாவதாரம், பொன்னியின் செல்வன் என காலகட்டத்திற்கு ஏற்ற திரைப்படங்களுக்கான கலை இயக்குநர் பட்டியலில் முதல் தேர்வாக இன்றும் தோட்டா தரணியே முன்னணியில் இருக்கிறார். இறுதியாக, குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி ஆகிய படங்களுக்கு கலை வடிவமைப்பு செய்திருந்தார்.

அண்மையில், பிரான்ஸ் கலை மற்றும் கலாசார அமைப்பின் மூலம் திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய தோட்டா தரணி தன் செட் பணிகளில் அதிக செலவு செய்து போடப்பட்ட செட், நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான அர்ஜுன் படத்தில் இடம்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட்தான் என்றும் இதற்கு 2004-லிலேயே ரூ. 3.5 கோடி செலவானது என்றும் தெரிவித்துள்ளார். (இன்றைய மதிப்பைக் கணக்கிட்டால் ரூ. 50 கோடிக்கும் மேல்)

அர்ஜுன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் செட் அமைப்பு இன்றும் இந்திய சினிமாவின் சிறந்த கலை உருவாக்க பணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமாக, படத்தில் இடம்பெற்ற, ‘மதுரா, மதுரா’ பாடலில் தத்ரூபமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குக்குள் படப்பிடிப்பு செய்யப்பட்டதுபோல் இருந்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது.

YouTube video thumbnail

summary

thotta tharani spokes about his costliest set work

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.