லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சினிமாவிலிருந்து விலகும் விஜயலட்சுமி!

திரைத்துறையிலிருந்து விலகும் விஜயலட்சுமி...

vijayalakshmi

விஜயலட்சுமி

Published On :

நடிகை விஜயலட்சுமி சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் அகத்தியனின் மகள்களில் ஒருவர் விஜயலட்சுமி. கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையிலிருந்தவருக்கு சென்னை 28 திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக சுல்தான் தி வாரியர் என்கிற அனிமேஷன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்தப் படத்திற்காக சில நாள்கள் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கவும் செய்தார். ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக விஜயலட்சுமி நடித்தார். இறுதியாக, மிடில் கிளாஸ் திரைப்படத்திலும் நடித்து கவனம் பெற்றார்.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

இந்த நிலையில், விஜயலட்சுமி தன் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலுக்காக சினிமாவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சினிமா படப்பிடிப்பு நாள்களால் தன் அன்றாட செயல்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

Summary

actor vijayalakshmi quits cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.