தமிழ்நாட்டில் 9 ஆண்டுகளாக இருந்தும் பிக் பாஸ் வீட்டில்தான் முதல்முறை தனது பெயரை தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டதாக மேடை நடனக் கலைஞர் ரம்யா ஜோ தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், பள்ளிக் கூட படிப்பையும் முழுவதுமாக முடிக்காமல் தமிழ்நாட்டில் விழாக்கால மேடைகளில் நடனமாடத் தொடங்கினார். இதில் கிடைத்த வருவாயால், தொடர்ந்து முழுநேர மேடை நாடகக் கலைஞராகவே மாறினார்.
பெற்றோர் இல்லாததால், தனது சகோதரிகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக பள்ளிப் படிப்பை தொடராமல் முழுநேர நடனக் கலைஞராக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் பள்ளிக்கூட போட்டி நடைபெற்று வருவதால், அதில் மாணவியாக வேடமேற்றுள்ள ரம்யா, தனது பெயரை எழுத, படிக்க கற்றுக்கொண்டார்.
தமிழ் ஆசிரியையாக வேடமேற்றுள்ள கனி திரு, போட்டியை தனிப்பட்ட முறையில் பார்க்காமல், ரம்யாவுக்கு தனதுபெயரை தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்தார்.
மேலும், தமிழில் பொருளுடன் 5 திருக்குறளையும் பயின்றார். இதனை பலர் முன்பு கூறி, சக போட்டியாளர்களையும் ரசிகர்களையும் வியப்பிற்குள்ளாக்கினார். இதனால், இந்த வாரத்திற்கான சிறந்த மாணவியாக / போட்டியாளராக ரம்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: பார்வையாளர்களைக் கவர்ந்த பிக் பாஸ் பள்ளிக்கூடம்!
Summary
bigg boss 9 tamil Ramya joo learn tamil in school ask
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










