நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

News image

சோனம் கபூர் - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :1 அக்டோபர் 2025, 5:49 pm IST

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்த சோனம், 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்குத் தாயானார். இதற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சோனம் கபூர், மீண்டும் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கணவருடன் சோனம் கபூர்

கணவருடன் சோனம் கபூர் - படம் - இன்ஸ்டாகிராம்

கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் உருவான பிலின்ட் படத்தில் முதன்மை பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார். தற்போது கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிது இடைவேளை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் இவர் நடித்த ராஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனால், தமிழிலும் சோனம் கபூர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Sonam Kapoor Pregnant Expecting Second Child With Anand Ahuja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.