பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

உமாபதி ராமையா இயக்கத்தில் நடிகர் நட்டி நடிக்கும் புதிய படம் குறித்து...

Published On :

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று (அக். 3) நடைபெற்றுள்ளது.

‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. இந்த நிலையில், நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதியுள்ள அரசியல் கலந்த நகைச்சுவை திரைப்படத்தை அவர் இயக்குகின்றார்.

கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், நடிகர்கள் நட்டி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தர்புகா சிவா இசையில் உருவாகும் பெயர் அறிவிக்கப்படாத இந்தப் படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றுள்ளது.

இத்துடன், நடிகர்கள் தம்பி ராமையா, இளவரசு, கிங்ஸ்லே, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், வீஜே ஆண்ட்ரூஸ், சத்யன், ஜாவா சுந்தரேசன், வடிவுக்கரசி, சாந்தினி தமிழரசன், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Summary

The inaugural ceremony for the new film directed by Umapathi Ramayya, son of actor Thambi Ramaiah, took place today (October 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.