எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பிக் பாஸ் 9 தொடக்க நாளில்... முத்துக்குமரனின் புதிய முயற்சி!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் புதிய இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

News image

முத்துக்குமரன்

Updated On :6 அக்டோபர் 2025, 4:21 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முத்துக்குமரன் புதிய இணையத் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார். பிக் பாஸ் சீசன் 9 தொடக்க நாளையொட்டி இதனை அவர் அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்ற முத்துக்குமரன், அடுத்தடுத்து பல புதிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் நட்சத்திரத் தொகுப்பாளராக உயர்ந்தார்.

தொடர்ந்து திரைத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற முயற்சியுடன் இருந்த அவருக்கு, தற்போது பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் மூலம் இணையத் தொடரில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கான பூஜை அக். 5ஆம் தேதி நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் நேற்று தொடங்கியதால், இதனையொட்டி தனது புதிய பயண அறிவிப்பையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது,

''அக். 5. கடந்த ஆண்டு இதே நாள் பெரும் வெளிச்சத்துக்கு மத்தியில் பிக் பாஸ் மேடையில் நின்றது நினைவில் இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து என்னை வெளியேற்றிவிடுவார்களோ என்ற பயத்தில் இருந்து என்னை தேற்றி ஆதரவு கொடுத்த அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி செலுத்திக்கொள்கிறேன்.

பிக் பாஸ் முடிந்து ஓராண்டு ஆகியும் இன்னும் என்னைப் பொது இடங்களில் பார்ப்பவர்கள் என் மீது அன்பு செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் இந்த் அன்பு என்றுமே எனக்கு வேண்டும் என்ற பேராசை எப்போதும் எனக்கு உண்டு.

பிக் பாஸ் போட்டிக்கு இவன் தகுதியானவர் என்று நம்பி என்னை அனுப்பிய பிரதீப் மில்ராய், பாலச்சந்திரன், ஜெகன், அருண் - அரவிந்த் என எல்லோருக்கும் நன்றி.

இன்று என் மீது வைத்துள்ள அன்பின் முழு உருவமான் பிளாக்‌ஷீப்பில் எனக்கு பெரிய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் விக்னேஷ்காந்த் அண்ணனுக்கு நன்றி. உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த உழைப்பைக் கொடுப்பேன். உங்கள் அன்பு என்றுமே எனக்கு கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற பேராசையுடன் நான் முத்துக்குமரன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Bigg boss 8 Muthukumaran act as hero in blaksheep web series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.