பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைந்து ஒரே திரைப்படமாக வெளியிடுகின்றனர்.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் பாகுபலி. கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை யோசிக்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.
இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 1 & 2 பாகங்களை இணைத்து பாகுபலி தி எபிக் பெயரில் வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீட செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், “பாகுபலி 1 மற்று 2-யை 3.40 மணி நேரம் ஓடக்கூடிய ஒரே திரைப்படமாக திரைக்குக் கொண்டு வருகிறோம். சில காட்சிகள் மற்றும் பாடல்கள் நீக்கப்பட்டு கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதை இடைவேளைக் காட்சியாகவும் மீதமுள்ள கதையை இரண்டாம் பகுதியாகவும் இணைந்துள்ளோம். இதனால், பாகுபலியை ரசிகர்கள் மீண்டும் கொண்டாடுவதற்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அரசனில் சிம்புவின் தோற்றம் இதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.