தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ரஜினி - கமல் திரைப்படத்திற்குத் தயாராகும் லோகேஷ் கனகராஜ்?

ரஜினி, கமல் படத்தின் கதை விவாதத்தில் லோகேஷ்...

ரஜினி, கமல், லோகேஷ் கனகராஜ்

Published On :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினி - கமல் திரைப்படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கிய கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக ஓரளவு வசூலீட்டியது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் லோகேஷ் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனை வைத்து புதிய திரைப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிப்பது உண்மைதான்; ஆனால், இயக்குநர் யாரென முடிவாகவில்லை என ரஜினி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரஜினி - கமல் திரைப்படத்திற்கான கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி இணைந்தால் 46 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

director lokesh kanagaraj discussing the script for rajini, kamal movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.