கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இட்லி கடை வெற்றியா? தோல்வியா?

இட்லி கடை திரைப்படம் குறித்து...

தனுஷ்

Published On :

இட்லி கடை திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பின் முதல் வெளியீடு என்பதால் படத்திற்கான புரமோஷன்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பல பகுதிகளில் நடைபெற்றது. இதுவே தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் புரமோஷன் செய்யப்பட்ட படமாகும்.

இட்லி கடையும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், மறுபுறம் நல்ல கருத்துகளும் கிடைத்தன. இதனால், இட்லி கடை படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், விமர்சன ரீதியான வரவேற்பு கிடைத்தாலும் வணிக ரீதியாக இப்படம் வசூலில் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பதாகவே தெரிகிறது. காரணம், ரூ. 70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் இதுவரை ரூ. 45 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

காந்தாரா சாப்டர் - 1 படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இட்லி கடைக்கு கூட்டம் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், திரையரங்க வெளியீடு வழியாக இப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்றே தெரிகிறது.

Summary

actor dhanush's idli kadai movie collected more than Rs.45 crores in box office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.