காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

மகுடம் படத்தை இயக்கும் விஷால்! பாதியில் விலகிய இயக்குநர்?

மகுடம் திரைப்படம் குறித்து...

News image

நடிகர் விஷால்

Updated On :15 அக்டோபர் 2025, 2:35 pm IST

நடிகர் விஷால் மகுடம் திரைப்படத்தை இயக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு நடிகர் விஷாலை வைத்து மகுடம் திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் துவங்கியது.

சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகும் இதில் நடிகை துஷாரா விஜயன் நாயகியாகவும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மகுடம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கடல் மற்றும் துறைமுகம் சார்ந்த கதையாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ரவி அரசுக்கு பதிலாக விஷாலே படத்தை இயக்கி வருகிறாராம். அவரே காட்சிகளை இயக்கும் விடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குநருக்கும் விஷாலுக்கு ஏதாவது பிரச்னையா இல்லை தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடா எனத் தெரியவில்லை. ஆனால், திடீரென இயக்குநர் இல்லாமல் விஷாலே படத்தை எடுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அரசன் புரோமோ 5 நிமிடம்!

Summary

actor vishal directs magudam movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.