வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

84 மார்க் போதாது… சிவகுமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

நடிகர் சிவகுமாருக்கு கமல்ஹாசனின் வாழ்த்துச் செய்தி தொடர்பாக...

News image

சிவகுமாருடன் கமல்ஹாசன்.

Updated On :27 அக்டோபர் 2025, 3:27 pm IST

நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளுக்கு, கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான கந்தன் கருணை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் கடைசியாக, 2001-ல் வெளியான அஜித், ஜோதிகாவின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார்.

நடிப்பை நிறுத்திவிட்ட சிவகுமார், கம்பராமாயணம், திருக்குறள் என சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் சிவகுமார் தன்னுடைய பிறந்த நாளை, இன்று(அக். 27) கொண்டாடிவரும் நிலையில், அவருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் பதிவில், “சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்” என்று தெரிவித்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Summary

Kamal Haasan has wished actor Sivakumar on his birthday in a unique way.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.