25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு வந்த திருமணப் பரிசு குறித்து...

சொகுசுக் காருடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந், தயாரிப்பாளர் மகேஷ் - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :28 அக்டோபர் 2025, 10:03 pm IST

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பு நிறுவனம் சொகுசுக் காரை பரிசளித்துள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே 1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படம் பிரபலங்கள் மத்தியில் மட்டுமின்றி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

ஷான் ரோல்டன் இசையமைத்த இப்படத்தில் இயக்குநர் அபிஷனும் சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.

இதனிடையே டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பு நிறுவனம் பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளது.

அக்டோபர் 31-ம் தேதி அபிஷன் ஜீவிந்திற்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அவருக்கு சொகுசுக் காரை தயாரிப்பாளர் மகேஷ் பரிசளித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களையும் விடியோவும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்தின் செயலுக்கும் அபிஷனின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

BMW car gift for Tourist Family director

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.