பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிக்கலில் புரோ கோட்?

புரோ கோட் திரைப்படம் குறித்து...

bro code poster

ரவி மோகன், எஸ்ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன் - official poster

Published On :

நடிகர் ரவி மோகனின் புரோ கோட் திரைப்படம் பெயர் சிக்கலைச் சந்தித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் புரோ கோட் (Bro code). இதில், ரவி மோகனுடன் எஸ். ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் திருமணமான ஆண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஜாலியாக பேசலாம் எனத் தெரிகிறது.

இதன், அறிமுக புரோமோ விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல மதுமான நிறுவனமான புரோ கோட் தில்லி உயர்நீதிமன்றத்தில் ரவி மோகனின் புரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.

காரணம், புரோ கோட் நிறுவனம் தமிழகத்தில் புதிய மதுபான வகைகளை அறிமுகம் செய்ய ரவி மோகனின் படத்தை புரமோஷனாக பயன்படுத்த அணுகியதாகவும் அவர் மறுத்ததால் இந்நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ரவி மோகன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில், பெயரையும் திரைக்கதையும் முறையாக பதிவு செய்திருப்பதால் ரவி மோகன் படத்தின் பெயரை வைத்துக்கொள்ள நீதிபதி ஒப்பதல் அளித்திருக்கிறார். இதன், மேல்முறையீடு விசாரணை நவம்பர் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

actor ravi mohan's bro code movie faced new problem.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.