ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஓடிடியில் வெளியான லோகா, காந்தாரா சாப்டர் - 1

லோகா, காந்தாரா சாப்டர் - 1 படங்களின் ஓடிடி வெளியீடு குறித்து...

News image

காந்தாரா சாப்டர் - 1, லோகா போஸ்டர்கள்.

Updated On :31 அக்டோபர் 2025, 1:42 pm IST

லோகா, காந்தாரா சாப்டர் - 1 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கர்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய காந்தாரா படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் இந்தப் படம் அக்.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பான் இந்திய வெளியீடான காந்தாரா, இதுவரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1, இன்று(அக். 31) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான ’லோகா சேப்டர் 1: சந்திரா’ படம் கடந்த ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் சூப்பர் வுமன் கதையாக உருவான இந்தப் படத்தில் முன்னணி பாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.

லோகா திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.

Summary

Loka, Gandhara Chapter - 1 is being released on OTT platforms and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.