திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!

ஐஸ்வர்யா லட்சுமி சமூக ஊடகங்களில் இருந்து விலகியது பற்றி...

News image

ஐஸ்வர்யா லட்சுமி - Instagram

Updated On :13 செப்டம்பர் 2025, 11:46 am IST

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், ரசிகர்கள் ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”என்னை துறையில் தக்கவைத்துக் கொள்ள சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்ற கருத்தில் நீண்ட காலமாக இருந்தேன். நான் இருக்கும் துறையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, காலத்துக்கு ஏற்ப மாறுவது அவசியம் என்று நினைத்தேன்.

ஆனால், சமூக ஊடகங்கள் என்னை தலைகீழாக மாற்றியுள்ளது. எனது பணிகளில் இருந்து என்னை வெற்றிகரமாக திசைதிருப்பியுள்ளது. என்னுள் இருந்த சிந்தனையைப் பறித்துவிட்டது. என் சொல்லகராதி மற்றும் மொழியைப் பாதித்துள்ளது. ஒரு எளிய இன்பத்தையும் மகிழ்ச்சியற்றதாக மாற்றியுள்ளது.

நான் ஒரு பொதுவானவளாக சூப்பர்நெட்டின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப வாழ விரும்பவில்லை. ஒரு பெண்ணாக, அலங்காரம் மற்றும் கட்டுப்பாடு பற்றி அறிந்து கொள்ள நிறைய பயிற்சி செய்ய வேண்டியிருந்தது, மேலும் அதை எதிர்க்க இன்னும் கடினமாக பயிற்சி செய்தேன்.

நான் கலைக்காகவும் எனக்குள் இருக்கும் சிறிய பெண்ணுக்காகவும் சரியானதைச் செய்ய விரும்புகிறேன். முழுமையான இணைய மறதியைத் தேர்ந்தெடுக்கிறேன்.

அர்த்தமுள்ள உறவுகளையும், சினிமாவையும் உருவாக்குவேன் என நம்புகிறேன். நல்ல சினிமாவில் நடித்த பழைய அன்பைக் கொடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை நடிகை அனுஷ்கா, சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

Summary

Actress Aishwarya Lekshmi has announced that she is quitting social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.