5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!

நடிகை வினுஷா தேவி புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்கு தாயாகவே நடிக்கவுள்ளார்.

News image

வினுஷா தேவி - இன்ஸ்டாகிராம்

Updated On :17 செப்டம்பர் 2025, 4:31 pm IST

நடிகை வினுஷா தேவி புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்குத் தாயாகவே நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் வினுஷா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பனி விழும் மலர் வனம் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் அக்கா - தம்பி பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பானது. இதில், நடிகர் ரயானுக்கு அக்காவாக வினுஷா நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சின்னி என்ற தொடரின் மறு உருவாக்கத்தில் நடிகை வினுஷா நடிக்கவுள்ளார்.

வினுஷா தேவி

வினுஷா தேவி - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் பெண் குழந்தையை வளர்க்க பாடுபடும் கணவரை இழந்த மனைவியாக நடிக்கவுள்ளார். பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கவுள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடரிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் பாத்திரமே வினுஷாவுக்கு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Barathi kannamma serial actress vinusha devi in new serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.