கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2025, 8:41 pm IST

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் டிரம்ப் கூறியதாவது,

``ஒரு குழந்தையிடமிருந்து மிட்டாயைத் திருடுவதுபோல, அமெரிக்காவிடமிருந்து திரைப்படத் தயாரிப்பு வணிகம் மற்ற நாடுகளால் திருடப்படுகிறது.

டிரம்ப் பதிவு

டிரம்ப் பதிவு - Truth Social

இந்த நீண்டகால மற்றும் தீர்வடையாத சிக்கலைத் தீர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவிகித வரியை விதிப்பேன். இதனை கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வெளிநாட்டு பொருள்கள் விற்கப்படுவதற்கும், பிற நாட்டு ஊழியர்கள் பணிபுரிவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரியையும் விதிக்கும் அந்நாட்டு அதிபர் டிரம்ப், தற்போது வெளிநாட்டில் தயாரிக்கப்படும் (ஹாலிவுட் அல்லாத) திரைப்படங்களுக்கும் வரியை விதிக்கவுள்ளார்.

Summary

US President Trump imposes 100% tariff on non-Hollywood movies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.