வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாகிறது.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமானதும் கடந்த ஜூன் மாதம் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் தாணு, “வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு கண்டிப்பாக துவங்கும்.” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் சிம்புவை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதையும் தாணுதான் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலையில் துவங்கும் என தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
இதையும் படிக்க: புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கும் சூர்யா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.