நடிகர் ரஜினிகாந்த் - 173 திரைப்படம் குறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் செல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், தன் 173வது திரைப்படமாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
கூலி, ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்கள் ஆக்சன் படங்கள் என்பதால் அடுத்த திரைப்படத்திலாவது ஜனரஞ்சகமாக நடிக்க வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் சுந்தர். சி படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், சுந்தர் சி அப்படத்திலிருந்து விலக, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி 173-வது படத்தை இயக்குகிறார்.
மேலும், இப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்த, தி அவுட்பிட் (the outfit) திரைப்படத்தின் தழுவலாகவே உருவாகவுள்ளதாகவும் இதில் தையல்காரர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வித் லவ் திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “தலைவர் - 173 திரைப்படத்தை நான்தான் இயக்குகிறேன் என்றதும் பலருக்கும் இவனா என்கிற பதட்டம் உண்டாகியுள்ளது. ஆனால், கண்டிப்பாக இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிறைவுடன் வருவீர்கள். இது என் வாக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


