பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!

தாய் கிழவி திரைப்படத்தின் முதல் பாடலின் வெளியீடு குறித்து...

News image

தாய் கிழவி படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்

Insta/ SK productions

Updated On :4 பிப்ரவரி 2026, 1:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் “தாய் கிழவி”.

இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள “தாய் கிழவி” படத்தின் “தாய் கிழவி வரா” எனும் முதல் பாடல், நாளை (பிப். 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் முனிஷ்காந்த், பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார், ரெயிச்சல் ரிபேக்கா ஆகியோர் நடித்துள்ள தாய் கிழவி படம் வரும் பிப். 20 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Sivakarthikeyan has sung the first song from the film "Thai Kizhavi," which features actress Radhika Sarathkumar in the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.