அய்யானார் துணை தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரம் நடந்தவற்றை ஒரு நாளில் பார்க்கும் விதமாக புதிய முயற்சியை தொடர் குழு மேற்கொண்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்தாண்டு ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் மதுமிதா, அரவிந்த் சேஜு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் நடந்த ஒரு வாரக் கதையை, ஒரு நாளில் பார்க்கும் விதமாக வரும் பிப். 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடர்ந்து 1.30 மணி நேரம் அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதற்கு ரசிகர்களும் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Summary
The Ayyanar Thunai series team has undertaken a new initiative to present the events that occurred from Monday to Friday in a single episode.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய நடிகர்கள்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

கோடை விடுமுறைக்கு லண்டன் சென்ற நடிகை மதுமிதா!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




