டபிள்யூபிபிஎல்: அரையிறுதிக்கு முன்னேறிய பெங்களூரு ஜவான்ஸ்..! அட்லீ பகிர்ந்த செல்ஃபி விடியோ!
டபிள்யூபிபிஎல் இரண்டாவது சீசனில் அட்லியின் அணியான பெங்களூரு ஜவான்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லி தனது சமூக வலைதள பக்கத்தில் செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார்.
டபிள்யூபிபிஎல் (உலக பிக்கில்பால் லீக்) முதல் சீசன் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் பெங்களூரு ஜவான்ஸ் கோப்பை வென்றது. இந்த அணியின் உரிமையாளராக இயக்குநர் அட்லீயும் அவரது மனைவி பிரியா அட்லீயும் இருக்கிறார்கள்.
தற்போது, இரண்டாவது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெங்களூரு ஜவான்ஸ் 3-2 கேமில் ராஜஸ்தான் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ விடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக பெங்களூரு ஜவான்ஸ் அணியின் எடூராடோ இரிஜாரி தேர்வானார்.
சமந்தாவின் சென்னை சூப்பர் சாம்பியன்ஸ் 4-1 என்ற கேமில் ஹைதராபாதை வீழ்த்தியுள்ளது.
சமந்தாவின் சென்னை அணி தோல்விகளே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அட்லீ தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தீபிகா படுகோன் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா தனது சொந்த தயாரிப்பில் மா இன்டி பங்காரம் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
Selfie capture of Atlee after the post match celebrations of Bengaluru Jawans semi qulaify in WPBL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

