குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

வித் லவ் படக்குழுவைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியது குறித்து...

நடிகர் ரஜினிகாந்துடன் வித் லவ் பட நாயகன் அபிஷன் ஜீவிந் - Insta/Abishan jeevinth

Published On :10 பிப்ரவரி 2026, 3:53 pm IST

நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்து வெளியான புதிய திரைப்படம் “வித் லவ்”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த பிப். 6 அன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “வித் லவ்” படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை இன்று (பிப். 10) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

மேலும், இப்படம் வெளியான 3 நாள்களில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Actor Rajinikanth has personally called the crew of "With Love" and praised them.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.