எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) ஒளிபரப்பாகி வருகிறது.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
எதிர்நீச்சல் -2 தொடரின் மறுஒளிபரப்பு காலை 8.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், அந்த நேரத்தில் எதிர்நீச்சல் - 2 தொடரை ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டு, இதற்கு பதிலாக காலை 8.30 மணிக்கு இதிகாச தொடரான ராமாயணம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகம் காலை 10.30 மணி வரை 11.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதேபோல சிங்கப்பெண்ணே தொடரின் மறுஒளிபரப்பு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
புதிய தொடர் வருகையாலும் டிஆர்பியை கூட்டுவதற்காகவும் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை தொலைக்காட்சி நிர்வாகம் மாற்றியமைத்து வருகிறது.
Summary
The broadcast of the edhirneechal series has been changed again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











