எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம்...
Ethirneechal-2 Serial Actress Kanika explains
நடிகை கனிகாபடம் - இன்ஸ்டாகிராம்
Updated on
2 min read

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை கனிகா விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த கனிகா, திடீரென விலகியதற்காக பல்வேறு காரணங்கள் சமுக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான சின்ன திரை விருதுகளில், எதிர்நீச்சல் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை கனிகாவிற்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இவருடன் சிறந்த குணச்சித்திர நடிகர் (மாரிமுத்து), சிறந்த இயக்குநர் (திருச்செல்வம்), சிறந்த வசனம் (ஸ்ரீ வித்யா) உள்ளிட்டப் பிரிவுகளிலும் எதிர்நீச்சல் தொடர், மாநில விருதுகளை வென்றது.

மாநில அரசு விருதுடன்...
மாநில அரசு விருதுடன்...படம் - இன்ஸ்டாகிராம்

சிறந்த குணச்சித்திர நடிகைக்கான மாநில அரசின் சின்ன திரை விருது கிடைத்தும், கனிகா எதிர்நீச்சல் தொடரிலிருந்து விலகியது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவியது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்துள்ள கனிகா, தனது மகனுக்காக எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகியதாக விளக்கம் அளித்துள்ளார்.

கனிகா பேசியதாவது:

''நடிப்புத் துறைக்கு நான் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் பாடுவதற்காகச் சென்றபோது, ஒரு பெண் வரவில்லை என்பதால், நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியதாயிற்று. அதில் இரண்டாவது இடத்தையும் பிடித்தேன். என் புகைப்படம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வெளியானது.

அதன் பிறகே நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஃபைவ் ஸ்டார், எதிரி, டான்சர் என பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஏதேனும் விருது கிடைக்காதா? என ஏங்கியிருக்கிறேன்.

மகனுடன் நடிகை கனிகா
மகனுடன் நடிகை கனிகாபடம் - இன்ஸ்டாகிராம்

ஆனால், திருமணத்துக்கு பிறகு நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்டு நடிக்கும்போது எதிர்நீச்சல் தொடரில் விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணம் ஈஸ்வரி பாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் திருச்செல்வம்தான்.

தற்போது என் மகன் 10 ஆம் வகுப்பு படிக்கிறான். அவன் அருகில் நான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இதனால், தொடரில் இருந்து விலகியுள்ளேன்.

இது திடீரென எடுத்து முடிவு அல்ல. இந்த முடிவு என் இயக்குநர், சக நடிகர்கள் என அனைவருக்குமே தெரியும். தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் தெரியும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Ethirneechal-2 Serial Actress Kanika explains
மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!
Ethirneechal-2 Serial Actress Kanika explains
புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!
Summary

Why Actress Kaniha leave Ethirneechal-2 Serial Actress Kanika explains

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com