அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமணம் குறித்து...

News image

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா - Insta/Vijay Devarakonda

Updated On :26 பிப்ரவரி 2026, 7:47 pm IST

பிரபல நடிகர்களும் நீண்ட நாள் காதலர்களுமான விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை (பிப். 26) நடைபெற்றுள்ளது.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஜஸ்தானின் உதய்ப்பூரிலுள்ள நட்சத்திர மாளிகையில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரும் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.

ஏற்கெனவே, இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு பத்திரிக்கை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், இன்று அவர்கள் திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக, விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிகழ்வை ஆவணப்படமாக்குவதற்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The wedding of famous actors Vijay Deverakonda and Rashmika Mandanna took place on Feb. 26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.