ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

யோகி பாபுவின் 300-வது படம்! பெயர் அறிவிப்பு!

யோகி பாபுவின் 300-வது படத்தின் பெயர் பற்றி...

Published On :1 ஜனவரி 2026, 10:03 am IST

யோகி பாபு படத்தின் போஸ்டர்: நடிகர் யோகி பாபுவின் 300-வது படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொல்லு சபா நிகழ்ச்சியின் உதவி இயக்குநராக இருந்த யோகி பாபு, அமீரின் யோகி படத்தில் முதல்முறையாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, பையா, வேலாயுதம், கலகலப்பு, வீரம், மான் கராத்தே உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தார்.

பின்னர், மண்டேலா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான யோகி பாபு, பொம்மை நாயகி, யானை முகத்தான், லக்கி மேன், தூக்கு துரை, குழந்தைகள் முன்னேற்ற கழகம் எனப் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

மண்டேலா திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

இந்த நிலையில், தேவ் சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கும் தனது 300-வது படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெயரை அறிவிக்கும் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு அர்ஜுனன் பேர் பத்து எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Story image

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Summary

Yogi Babu's 300th film: The title has been announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.