டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் தொடரால் முடங்கிய நெட்பிளிக்ஸ்!

ஸ்டிரேஞ்சர் திங்ஸ் இறுதி அத்தியாயத்தின் வெளியீட்டால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் முடங்கியது குறித்து...

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்... - Insta/Netflix

Published On :

ஸ்டிரேஞ்சர் திங்ஸ்: பிரபல இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-ன் இறுதி எபிசோட் வெளியானதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் முடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-யின் இறுதி எபிசோட் புதன்கிழமை (டிச. 31) இரவு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள இந்த இணையத் தொடரின் இறுதி அத்தியாயம் (சீசன்) மூன்று பிரிவுகளாக வெளியிடப்பட்டது. முதல் 4 எபிசோட்கள் நவ.26 அன்றும், அடுத்த 3 எபிசோட்கள் டிச. 25 அன்றும் வெளியாகின.

இறுதியான 8 ஆவது எபிசோடின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த நிலையில், நேற்று இரவு வெளியானவுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் பார்க்க முயன்றதால் நெட்பிளிக்ஸ் தளம் சுமார் 1 நிமிடத்திற்கு முடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளம் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியது.

முன்னதாக, பிரபல இணையத் தொடரான ஸ்டிரேஞ்சர் திங்ஸின் 5 ஆவது சீசன் மட்டும் ரூ.3,300 கோடி செலவில் உருவானது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that the Netflix OTT platform crashed due to the release of the final episode of the popular web series Stranger Things Season 5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.