ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அங்கம்மாள் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அங்கம்மாள் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

News image
Updated On :6 ஜனவரி 2026, 10:42 am IST

அங்கம்மாள் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் 'அங்கம்மாள்'.

பெண்கள் அணியும் ரவிக்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. பிரதான பாத்திரத்தில் நடிகை கீதா கைலாசம் நடித்துள்ளார்.

கடந்த டிச. 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மறைந்த பிரபல இயக்குநரான கே. பாலச்சந்தரின் மருமகளான நடிகை கீதா கைலாசம் இப்படத்தில் அங்கம்மாளாக நடித்திருக்கிறார். ரவிக்கை அணியாத காட்சிகளில் அங்கம்மாளாகவும், அதனை அணிந்தபின் அதனால் உருவாகும் போலித்தன்மைகளையும் தன் உடல்மொழியால் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், அங்கம்மாள் திரைப்படம் வரும் ஜன. 9 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Summary

The OTT release date of the film Angammal has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.