பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

முடிவடைகிறது அண்ணா தொடர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடர் விரைவில் முடிவடைகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2026, 2:10 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா தொடர் விரைவில் முடிவடைகிறது.

இந்தத் தொடர் 2023 மே மாதம் முதல் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் - வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடர், உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில், செந்தில் குமார் நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சுபிக்‌ஷா, ஹேமா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சூழ்நிலை காரணமாக தாய் சிறைக்குச் சென்ற பிறகு, தந்தையின் வளர்ப்பில் வளர்ந்த பிள்ளைகளை மையப்படுத்தி அண்ணா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. மூத்த அண்ணனாக இருந்து, தங்கைகளை பராமரித்து வரும் அண்ணாவை(செந்தில் குமார்) பிரதானப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர். வில்லனாக நடித்துவரும் பூவிலங்கு மோகனின் நடிப்புக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஏ. துர்கா சரவணன் இயக்க, ராஜம்மாள் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

அண்ணா தொடர், விரைவில் நிறைவடைகிறது. அண்ணா தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவுப் பகுதி விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Summary

The series 'Anna', which is being broadcast on Zee Tamil television, concludes this weekend.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.