ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கர் வாழ்த்து குறித்து...

News image

இயக்குநர் ஷங்கர், முதல்வர் விஜய்

Updated On :13 மே 2026, 3:28 pm IST

தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யை வைத்து நண்பன் திரைப்படத்தை இயக்கினார். அதன்பின், பெரிய பட்ஜெட் படமொன்றில் இருவரும் இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படம் உருவாகவில்லை. ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தில் முதலில் அணுகப்பட்ட நடிகர் விஜய்தான். இருப்பினும், சில காரணங்களால் அவர் ஒப்பந்தமாகவில்லை.

தற்போது, திரைத்துறையிலிருந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு பல இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் விருப்பம் உண்மையாகியிருக்கிறது. மேலும், உயர முன்னேறிச் செல்லுங்கள் சகோதரரே” என வாழ்த்தியுள்ளார்.

Director Shankar has conveyed his wishes to Tamil Nadu Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.