அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

மன உளைச்சலில் இருந்தார்... கே. ராஜன் குடும்பத்தினர் விளக்கம்!

கே. ராஜன் மறைவு குறித்து குடும்பத்தினர் விளக்கம்...

News image

கே. ராஜன்

Updated On :56 நிமிடங்கள் முன்பு

தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இயங்கி வந்த தயாரிப்பாளர் கே. ராஜன் நேற்று (மே 17) சென்னை அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சில தகவல்கள் வெளியாகின. குடும்ப பிரச்னை காரணம் என்றும் கூறப்பட்டன.

இந்த நிலையில், கே. ராஜனின் மகன்கள், மகள் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைத்ததுடன், “எங்கள் அப்பா கே. ராஜன் ஏழ்மையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர். தன் கனவுகளை நனவாக்கியவர். அவர் குறித்து உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? தெரியாமல் தவறான கருத்துகளைப் பரப்பாதீர்கள்.

எங்கள் அப்பா சில தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுத்திருந்தார். அது எதுவும் திரும்பி வராததால் கடும் மன உளைச்சலில் இருந்தார். தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Producer K. Rajan's family has issued a clarification regarding his suicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.