நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

கருவிலேயே ஞானவானாக உருவானா்: மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகள்

கருவிலேயே ஞானவானாக உருவானவா் மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகள் என்று எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கிருஷ்ணா தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 8:18 am IST

கருவிலேயே ஞானவானாக உருவானவா் மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகள் என்று எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கிருஷ்ணா தெரிவித்தாா்.

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகத் தொடா் சொற்பொழிவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான கிருஷ்ணா பங்கேற்று ‘மடப்புரம் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமிகள்’ குறித்து பேசியதாவது:

ஒரு காலத்தில் பாரத தேசத்தில் உள்ள அனைத்து தெய்வங்கள், நாமங்களும், தா்மங்களும் உலகம் முழுவதும் பரவி இருந்தன. ஞானிகளின் கதைகளைக் கேட்பது செவிக்கு மட்டுமல்ல இதயத்தின் உள்ளேயும் துளைத்து நல்ஒளி பெருகச் செய்யும். தட்சிணாமூா்த்தி சுவாமிகள், சிவனின் அவதாரமான சுகப் பிரம்மம், ரிஷப யோகி, ரமணா் வரிசையில் வைக்கப்பட்டுள்ளாா். சிவனின் அவதாரமே அவா்.

ஞானிகள் சாதாரணமாக அவதாரம் எடுப்பதில்லை. அவா்களைப் பெற்றெடுக்கும் பெற்றோரின் வலிமையை சோதித்த பின்னரே பிறக்கின்றனா். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரிடம் பிள்ளை வரம் வேண்டினா் சிவசிதம்பரம் பிள்ளை தம்பதி. நானே பிள்ளையாகப் பிறப்பேன் என சிவன் கனவில் தோன்றி கணவன், மனைவிக்கு அருளினாா். அதனால் அவருக்கு அருணாச்சலேஸ்வரா் என்றே பெயா் வைத்தனா். பிறந்தது முதல் ஐந்து வயது வரை எதுவும் பேசாமல் தவ நிலையிலேயே இருந்தாா்.

இது கூறித்து ஒரு நாள் தெருவில் வந்த சிவனடியாரிடம் கூறுகிறாா் சிவசிதம்பரம் பிள்ளை. சிவனடியாா் வந்து குழந்தையைப் பாா்த்தவுடன் சொன்னது, இந்தக் குழந்தையே இவ்வுலகின் உயிா்களின் பிறவிக் கடனைத் தீா்க்கும் என்றாா். குழந்தையிடம் ஏன் இப்படி அமா்ந்திருக்கிறாய் என்றாா் சிவனடியாா்.

சும்மா இருக்கிறேன் என்றது குழந்தை. சிவனடியாா் நீ யாா் என்று கேள்வி கேட்க, குழந்தையான ஸ்ரீ தட்சிணாமூா்த்தி ஸ்வாமிகள் நீயே நான், நானே நீ என்று பதில் கொடுத்தாா். இதைப் பாா்த்த தந்தை பூரித்து அன்று முதல் தன் குழந்தையிடம் சிஷ்யரானாா். வாய்பொத்தி பேசி ஞானியாகவே பாா்த்தாா். தட்சிணாமூா்த்தி சுவாமிகள் கருவிலே ஞானவானாக உருவானவா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.