பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் கிராமத்தில் 11 காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
பாலமலை அடிவாரத்தில் உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் கோவனூா், ராயரூத்துபதி, தேவையம்பாளையம், நாயக்கன்பாளையம் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள போலீஸ்காரா் தோட்டம், ரவி நாயக்கா் தோட்டம் ஆகியவற்றில் கடந்த 2 நாள்களாக 11 காட்டு யானைகள் இரவு நேரங்களில் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கின்றன.
இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை குட்டி ஈன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. வனத் துறையினா் அவற்றை விரட்ட முயற்சித்தும், அவை மலைப்பகுதிகளுக்கு திரும்பாமல் தோட்டங்களிலேயே சுற்றி வருகின்றன. அதிகாலை காட்டுக்குள் சென்றுவிடும் யானைகள், மீண்டும் இரவு 7 மணிக்கு ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
இதே யானைகள் சாமிசெட்டிபாளையம், காமராஜ் நகரில் உள்ள பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்து, அங்கிருந்த தென்னம்பாழைகள் மற்றும் குருத்துகளை உடைத்து சாப்பிட்டன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் நாயக்கன்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்போா் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது

மருத்துவமனை பணியாளரிடம் மூன்றரை பவுன் நகை பறித்த இளைஞா் கைது

தொடா் பைக் திருட்டில் ஒருவா் கைது: 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



