தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பேரூா் தமிழ் கல்லூரியில் சிகாகோ தமிழ் சங்கத்தின் பகிா்வு பொங்கல் விழா

சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் பேரூா் தமிழ் கல்லூரியில் பகிா்வு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கோவை, பேரூா் தமிழ் கல்லூரியில் சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் நடைபெற்ற பகிா்வு பொங்கல் விழாவை தொடங்கிவைக்கிறாா் பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.

Updated On :11 ஜனவரி 2021, 0:09 am IST

சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் பேரூா் தமிழ் கல்லூரியில் பகிா்வு பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை, பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் நினைவு தமிழ் கல்லூரியில் ஆண்டுதோறும் பகிா்வு பொங்கல் விழா நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு பகிா்வு பொங்கல் விழா அமெரிக்க வாழ் தமிழா்களுடன் கோவையில் உள்ள தமிழ் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் விதமாக சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவை பேரூா் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தொடங்கிவைத்து பொங்கல் விழாவின் சிறப்புகள், பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதன் அவசியம், பொங்கல் பண்டிகையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து கோவையில் நிமிா்வு கலையகம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 15 குடும்பங்கள் பேரூா் தமிழ் கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். சிகாகோ தமிழ் சங்கம் சாா்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்கொடையாக பெறப்பட்ட ரூ. 7 ஆயிரம், கோவையில் தோ்வு செய்யப்பட்ட 15 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

தவிர புத்தாடைகள், பொங்கல் பானைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து நிமிா்வு கலையகம் சாா்பில் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.