கடலூர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
÷சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
÷விழாவில் பங்கேற்ற சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
அவர் பேசியது:
÷பல்வேறு கல்வி நிலையங்களைத் தோற்றுவித்த சுவாமி சகஜானந்தருக்கு, சிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நான் கோரிக்கை விடுத்தேன்.
÷அக்கோரிக்கையை ஏற்று, மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் சிதம்பரத்தில் மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.
÷தமிழகத்தைப் பொறுத்தவரை, பொதுத்தேர்வுகளின் கல்வித் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கின்றன.
÷அம்மாவட்டங்களுக்கு அரசு அளிக்கும் அதே சலுகைகளைத்தான் கடலூர் மாவட்டத்துக்கும் வழங்குகிறது. ஆனால், கடலூர் மாவட்டம் கல்வித் தேர்ச்சியில் 31-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.
÷எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகஆர்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து, மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
÷விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜி.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கச் செயலர் பி.ராஜசேகரன் வரவேற்றார்.
÷நகரத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், கல்விக்குழு உறுப்பினர் டி.ஜெயராமன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.கலியமூர்த்தி, ஆசிரியை மாலா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
÷உதவித் தலைமை ஆசிரியை டி.வத்சலா நன்றிக் கூறினார்.
÷இதன் பின்னர், நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





