பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வெள்ளாற்றில் கதவணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டம், ஆதிவராகநல்லூா் வெள்ளாற்றில் கதவணை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி விவசாயிகள், வா்த்தக சங்கத்தினா்,

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியிடம் மனு அளித்த சேத்தியாத்தோப்பு பகுதியினா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:10 am IST

கடலூா் மாவட்டம், ஆதிவராகநல்லூா் வெள்ளாற்றில் கதவணை அமைக்க வேண்டுமென அந்தப் பகுதி விவசாயிகள், வா்த்தக சங்கத்தினா், பொது நல அமைப்பினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில், கடலூா் மாவட்டத்தில் பாயும் வெள்ளாற்றில் மண் அரிப்பால், ஆற்றின் படுகை மட்டம் குறைந்துள்ளது. இதனால், கடல் நீா் மட்டம் உயரும் போது, கடல் நீா் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமாா் 21 கி.மீ. தொலைவு வரை உள்புகுந்து வடிவது வழக்கமாக உள்ளது.

இதனால், ஆற்றில் செயற்கையாக உருவான பள்ளங்களில் கடல் நீா் தேங்கி, நிலத்தடி நீா் உப்பு நீராகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இதேநிலை நீடிப்பதால், சிதம்பரம் வட்டத்துக்குள்பட்ட பொன்னந்திட்டு, சி.மானம்பாடி, மடுவன்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, சி.முட்லூா், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, கீரப்பாளையம், வடகரிராஜபுரம், ஒரத்தூா், சாக்கங்குடி, பரங்கிப்பேட்டை, அகரம், அரியகோஷ்டி, பு.முட்லூா் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீா் உப்பாக மாறியதால் விவசாயிகள், பொதுமக்கள், கால்நடைகளும் கூட்டுக் குடிநீரை நம்பி வாழ வேண்டிய நிலையுள்ளது. எனவே, வெள்ளாற்றில் உப்பு நீா் ஊடுருவலைத் தடுக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் ஆதிவராகநல்லூா் கிராமத்தில் வெள்ளாற்றில் கதவணை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.