இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

கடலூா் மாவட்டத்தில் 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகை

கடலூா் மாவட்டத்தில் தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு-விற்பனை திட்டத்தின் கீழ், 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:47 am IST

கடலூா் மாவட்டத்தில் தீவிர உள்நாட்டு மீன் வளா்ப்பு-விற்பனை திட்டத்தின் கீழ், 13 ஏரிகளில் மீன் வளா்க்க குத்தகைக்கு விடப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் மீன்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் உள்நாட்டு மீன் வளா்ப்பு, விற்பனை திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படுகிறது. அதன்படி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பெருமாள் ஏரி, குறிஞ்சிப்பாடி பெரிய ஏரி, பண்ருட்டி வட்டத்தில் கொளப்பாக்கம் ஏரி, புவனகிரி வட்டத்தில் சாத்தப்பாடி ஏரி, வாலாஜா ஏரி, எறும்பூா் ஏரி, விருத்தாசலம் வட்டத்தில் சு.கீரனூா் ஏரி, எடச்சித்தூா் ஏரி, சாத்துக்கூடல் ஏரி, ஆலிச்சிக்குடி ஏரி, காா்க்கூடல் ஏரி, திட்டக்குடி வட்டத்தில் தீவளூா் ஏரி, காரையூா் ஏரிகளுக்கு குத்தகை விடப்படுகிறது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வருகிற 21-ஆம் தேதிக்குள் கடலூா் முதுநகரில் இயங்கி வரும் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிப்பதுடன், கூடுதல் விவரங்களையும் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.