தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பேருந்திலிருந்து பெற்றோர் தவற விட்ட 10 மாத பெண் குழந்தை மீட்பு

சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் தவறவிட்ட 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :11 மே 2013, 7:04 am

சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் தவறவிட்ட 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி உஷா. இவர்களது 10 மாத பெண் குழந்தை லோகேஸ்வரி. குழந்தை மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் தென் மாவட்டங்களுக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர்.

தருமபுரியை அடுத்துள்ள பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை மாலை பேருந்தை நிறுத்தி அனைவரும் ஓய்வெடுத்தனர். அப்போது, பேருந்தில் இருந்த குழந்தை லோகேஸ்வரி தவறி விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனிக்காமல் பேருந்து சென்று விட்டது. கேட்பாரின்றி சாலையோரம் தவழ்ந்து சென்ற குழந்தையை அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் முருகன் பார்த்து விசாரித்துள்ளார்.

ஆனால், குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. குழந்தையின் உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இதையடுத்து, குழந்தையை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீஸார் விசாரணையில், வேலூரைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் இருந்து குழந்தை தவறியது தெரிய வந்தது.

இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி குழந்தையை அதன் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.