முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

இறைச்சிக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்

அரூா் பேரூராட்சி 9-ஆவது வாா்டு பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 1:25 am IST

அரூா்: அரூா் பேரூராட்சி 9-ஆவது வாா்டு பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 8 மற்றும் 9 ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில், அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம், நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

அரூா் பேரூராட்சி 9 வாா்டு பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் சாலையோரத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. இந்தக் கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, 9 -ஆவது வாா்டு பகுதியில் உள்ள மாட்டிறைச்சிக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். 8 மற்றும் 9 -ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.வேடம்மாள், தலைமை கழகப் பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கு.தமிழழகன், பொறியாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.