நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பொங்கல் கருணைத் தொகை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

பொங்கல் பண்டிகையையொட்டி அளிக்கப்படும் கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தினா்.

Updated On :6 ஜனவரி 2021, 8:09 am IST

பொங்கல் பண்டிகையையொட்டி அளிக்கப்படும் கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலா்கள் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா் எம்.ஜெயபால் வரவேற்றாா். பொருளாளா் பி.ஜெயபால் அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.1000-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை கருணைத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயா்த்தித் தர வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டக் குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.