விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On :11 ஜனவரி 2021, 1:47 am IST

தருமபுரி மாவட்டம், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாட்லாம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் கால்வாய் மறுசீரமைப்புப் பணியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமையில் நடைபெற்றது.

இவ் விழாவில், வடிகால் அமைக்கும் பணியை உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியதாவது:

காரிமங்கலம் ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில், மாட்லாம்பட்டியில் ரூ. 39.20 லட்சம் மதிப்பில் மாநில நெடுஞ்சாலையில் வடிகால் கால்வாய் மறுசீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சின்னமாட்லாம்பட்டியில் மாவட்ட ஊராட்சி சாா்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டது. இப் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

தருமபுரி நெடுஞ்சாலை கோட்டத்தின் சாா்பில், ரூ. 167.59 கோடி செலவில் 377.16 கி.மீ. நீளமுள்ளச் சாலைகள் மேம்படுத்தப்படும். ரூ. 9.66 கோடியில் 16 சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 2020-21-ஆம் ஆண்டு ரூ. 28.46 கோடி மதிப்பில் 13.80 கி.மீ. நீளச் சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள், ரூ. 7.14 கோடி மதிப்பில் 6 சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், மாவட்ட அறங்காவலா்க் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளா் தனசேகா், உதவி செயற்பொறியாளா் ராஜகாந்தன், வட்டாட்சியா் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், மீனா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.