வேடசந்தூா் அருகே வியாழக்கிழமை இரவு சாலை மைய தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில், திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சின்னக்காளை (47). இவா், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை பணி முடிந்து, நள்ளிரவு நேரத்தில் வேடசந்தூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.
திண்டுக்கல்-கரூா் நான்குவழிச் சாலையில் லட்சுமணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக சாலை மைய தடுப்புச் சுவரில் மோதியதில், சின்னக்காளை பலத்த காயமடைந்தாா். உடனே, அவரை வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









