திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

நிலக்கோட்டையில் மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை

நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை பூ வரத்து குறைவு காரணமாக, கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

News image

நிலக்கோட்டைப் பகுதியில் மல்லிகை பூவை தாக்கியுள்ள கருகல் நோய்.

Updated On :2 ஜனவரி 2021, 9:26 pm IST

திண்டுக்கல்: நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை பூ வரத்து குறைவு காரணமாக, கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மலா் சாகுபடி செய்யப்படும் நிலக்கோட்டைப் பகுதியில், இந்த பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 50 டன் மல்லிகை பூ வந்த இடத்தில், தற்போது 50 கிலோ பூக்களை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

நிலக்கோட்டை சந்தையில் சனிக்கிழமை நிலவரப்படி, காய் மல்லிகை பூ ரூ.1,000 முதல் ரூ. 1,500 வரையிலும், 2 ஆம் ரகம் ரூ.3ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் ரகம் ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த 3 ஆண்டுகளில் மல்லிகை பூவுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச விலையாக இந்த தொகை பதிவாகியுள்ளது.

பனிப்பொழிவு அதிகரிக்கும்பட்சத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ விலை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மல்லிகை பூ மட்டுமன்றி, முல்லை, ஜாதிப் பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.1,100-க்கும், ஜாதி பூ கிலோ ரூ.800-க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

நோய் தாக்குதல்: நிலக்கோட்டை பகுதிகளில் பனிப்பொழிவு மட்டுமன்றி, சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் மல்லிகை பூ செடிகளில் மொட்டு கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளைப் பாதுகாக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.