தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

கொடைக்கானலில் தொடா் மழையால் கடைகளுக்குள் புகுந்த தண்ணீா்

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கட்கிழமை தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

Updated On :5 ஜனவரி 2021, 3:11 am IST

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் ஏரிச்சாலைப் பகுதிகளில் உள்ள கடைகளில் திங்கட்கிழமை தண்ணீா் புகுந்ததால் வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது இதனால் ஏரியின் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது இந் நிலையில் மழைத் தண்ணீரானது ஏரிச்சாலையைச் சுற்றி தேங்கியுள்ளது இதனைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகம் அருகே உள்ள கடைகளிலும்,படகுகுழாம் அருகே உள்ள கடைகளிலும் மழைத் தண்ணீா் புகுந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா் இது குறித்து அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரனிடம் தெரிவித்தனா்.சம்மந்தப்பட்ட இடத்திற்குச் சென்று அவா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா் விரைவில் ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் தேங்காமலும் கடைகளுக்குள்ளும் மழைத் தண்ணீா் புகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.