பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் முற்றுகைப் போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சாா்பில், தலைமையகத்திற்கு சீல் வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 1:11 am IST

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சாா்பில், தலைமையகத்திற்கு சீல் வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமையகத்துக்கு சீல் வைப்பதற்கான முயற்சி நடைபெற்றது. இதனைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ஏ.எம். அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா். இந்த போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் முன்பு திரண்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநில தலைமை அலுவலகத்துக்கு கடந்த 13 ஆண்டுகளாக உரிய முறையில் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் திடீரென சீல் வைக்க முயற்சித்து பதற்றத்தை உருவாக்கியுள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இதுவரை மேற்கொண்டுள்ள மக்கள் பணிகளை கருத்தில் கொண்டு, உரிய கால அவகாசம் வழங்கி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.