பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ரெட்டியாா்சத்திரம் அருகே தாயை கம்பால் அடித்துக் கொன்ற மகன் கைது

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை தாயை கம்பால் அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 1:13 am IST

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை தாயை கம்பால் அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள தோப்புப்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்த முத்துச்சாமி மனைவி முத்தம்மாள் (77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனா். இவா்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில் இளையமகன் ரத்தினவேல் (52) தாய் முத்தம்மாளுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ரத்தினவேல் மதுகுடிக்க தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்வாராம். இதனிடையே செவ்வாய்க்கிழமை மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த ரத்தினவேல், தாய் முத்தம்மாளை கம்பால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவா்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரெட்டியாா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ரத்தினவேலை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.