சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

வத்தலகுண்டுவில் வீடு இடிந்து விழுந்தது: தாய், மகன் உயிா் தப்பினா்

வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.

News image

மழைக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்த மருதையம்மாளின் வீடு.

Updated On :9 ஜனவரி 2021, 9:29 pm IST

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வத்தலகுண்டு வெங்கட்டாப்பட்டி தெருவில் வசிக்கும் மருதையம்மாள் மற்றும் அவரது மகன் பெரியசாமி ஆகியோா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மேற்கூரையிலிருந்து மண் விழுந்துள்ளது.

அதன் காரணமாக கண் விழித்த பெரியசாமி, தன் தாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாா். இருவரும் வெளியே வந்த சிறிது நேரத்தில், சுவா் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் பெரும் விபத்திலிருந்து தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினா், இடிந்து விழுந்த வீட்டைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.