சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

அதிமுகவில் நடப்பது குறித்து அதன் தலைவர்கள் வாய் திறக்க மறுப்பது ஏன்? - திருமாவளவன்

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியது பற்றி...

News image

தொல். திருமாவளவன். - கோப்புப்படம்

Updated On :5 ஜூலை 2026, 1:44 pm IST

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? என்று விசிக கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

என்ன காரணத்துக்காக அதிமுகவிலிருந்து விஜயபாஸ்கர் வெளியேறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவிலிருந்து ஆள்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடைபெறுகிறது என்ற விவாதம் ஒருபுறம் இருக்கிறது என்றாலும் கூட, அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

தவெகவுக்கு எதிராக ஆவேசப்படவேண்டிய, கொந்தளிக்க வேண்டிய தலைவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாக செய்கிறார்களே தவிர இதை ஒரு மக்கள் கருத்தாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எங்கள் கட்சியை சீர்குலைக்க பார்க்கிறார்கள், இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற குரலும் அதிமுக தலைவர்களிடத்தில் எழவில்லை.

தவெக, திமுக போன்றவை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றால் அது அவர்களின் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. இதனால் அதிமுக பாதிப்படைகிறது என்றால் இது அதன் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. அதைத் தவிர்த்து, இடையில் உள்ள எங்களிடம் கேள்வி கேட்பதில் எந்தப் பயனும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Summary

Thirumavalavan questioned on Sunday (July 5) why AIADMK leaders are refusing to speak about what is happening within the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.